• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'சிறுவர்களைப் பாதுகாப்போம்' தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 2017-2019
- சமூகத்தில் தற்போது பரவிவரும் பல்வேறுபட்ட தீங்குவிளைவிக்கும் செயற்பாடுகளிலிருந்து நாட்டின் உயிர்நாடியான சிறுவர்களைப் பாதுகாக்கும் முக்கிய தேவையானது அரசாங்கத்தினால் இனங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, வன்முறை துஷ்பிரயோகத்தை தடுத்தல், சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்தல், சுகாதாரம், போசாக்கு மற்றும் நலனோம்பல், ஆளுமை விருத்தி, கல்வி, வாழ்க்கைத்திறன் போன்ற முக்கிய மூன்று (03) துறைகளின் கீழ் சகல அம்சங்களையும் தழுவும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைவாக 2017 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரையிலான மூன்று (03) வருட காலப்பகுதிக்குள் 'சிறுவர்களைப் பாதுகாப்போம்' என்னும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.