2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சியம்பலாண்டுவ நீர்வழங்கல் திட்டத்தின் நிருமாணிப்பு - மொனறாகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ நீர்வழங்கல் திட்டமானது நீர்வழங்கல், துப்பரவேற்பாட்டு விருத்தி கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் சியம்பலாண்டுவ மற்றும் முத்துகண்டிய பிரதேசங்களில் சுமார் 8,450 வீடுகளுக்குக சுத்தமான குடிநீர் வழங்கப்படும். இந்த நீர்வழங்கல் திட்டத்தை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |