• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் மரக்கறி மற்றும் பழவகை சார்ந்த பெறுமதி சேர்க்கப்படும் நிலையங்களை நிருமாணித்தல்
- வௌிநாட்டு சந்தைகளை குறியிலக்காகக் கொண்டு வௌிநாடுகளில் காணப்படும் தரங்களுக்கும் தேவைகளுக்கும் அமைவான விதத்தில் மரக்கறி மற்றும் பழவகைகளை ஏற்றுமதி செய்வதற்கு உள்நாட்டு விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக, மரக்கறி மற்றும் பழவகை பதனிடல், பொதியிடல் மற்றும் களஞ்சியப்படுத்தல் வசதிகளுடன்கூடிய அவற்றின் பெறுமதி சேர்க்கப்படும் மேம்படுத்தும் மூன்று (03) நிலையங்களை அரசாங்க / தனியார் ஒத்துழைப்பின் கீழ் விவசாயப் பண்ணைகளுக்கு அருகாமையில் நிருமாணிக்கும் பொருட்டு ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.