2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
எல்பின்ஸ்டன் தியேட்டர் மண்டபத்தின் புனரமைப்பு - 1925 ஆம் ஆண்டில் நிருமாணிக்கப்பட்டதும் 1988 ஆம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்டதுமான கொழும்பு எல்பின்ஸ்டன் தியேட்டர் மண்டபமானது தற்போது டவர்ஹோல் தியேட்டர் மண்டபத்தின் ஊடாக நிருவகிக்கப்பட்டு வருகின்றது. இந்த தியேட்டர் மண்டபத்தை 600 ஆசனங்கள் கொண்ட தியேட்டர் மண்டபமொன்றாக நவீனமயப்படுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பொது மக்களுக்காக இதனை மீண்டும் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மீதி வேலைகளை பூர்த்தி செய்வதற்குத் தேவையான மேலதிக நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |