2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வட்டாரம ஶ்ரீ அரஹன்த்த மலியதேவ ரஜமஹ விகாரை புனிதபூமியை அபிவிருத்தி செய்தல் - 2017 அரச வெசாக் விழா நடாத்தப்படவுள்ள கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வட்டாரம ஶ்ரீ அரஹன்த்த மலியதேவ ரஜமஹ விகாரை புனிதபூமியின் அபிவிருத்தி பணிகளை பூர்த்தி செய்வதற்குத் தேவையான 35 மில்லியன் ரூபாவைக் கொண்ட மேலதிக நிதி ஏற்பாட்டினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |