• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகாதார தகவல் தொடர்பான தேசியக் கொள்கை
- மக்களுக்குத் தேவையான சுகாதார சேவை, நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை அரசாங்க வைத்தியசாலைகள் மூலம் வழங்கும் போது நோய் நிர்ணயித்தல், நோய்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் முடிவுகளை மதிப்பிடுதல், நிருவாக ரீதியிலான தீர்மானங்களை எடுத்தல், திட்டமிடுதல், மேற்பார்வை ஆகிய நோக்கங்கள் உரிய வகையில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். அதன் சார்பில் பிழையற்ற, நம்பகத்தன்மைவாய்ந்த மற்றும் இலகுவாக அணுகக்கூடிய, செலவு வினைத்திறன்மிக்க தகவல் முறைமையொன்று இருப்பது மிகச் சிறப்பான சுகாதார சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக அமையும். இலங்கையில் தேசிய சுகாதார தகவல் முறைமை முக்கியமாக அரசாங்க சுகாதார சேவைகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் தகவல்களைக் கொண்டிருப்பதோடு, எதிர்காலத்தில் சுகாதார சேவை வழங்கப்படும் தனியார்துறை சார்ந்த நிறுவனங்களிடமுள்ள தரவுகளில் பெரும்பாலானவையும் இந்த தகவல் முறைமையில் சேர்க்கப்படும். அதேபோன்று ஆவணங்களின் மீது அடிப்படையாக அமைந்த தரவுகளை பெற்றுக் கொள்ளும் அத்துடன் பரிமாறிக் கொள்ளும் முறையானது நவீன தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி விருத்தி செய்ய வேண்டியுள்ளது. இதற்கமைவாக, தேசிய சுகாதார சேவைக் கொள்கையின் எண்ணக்கருவுக்கு அமைவான விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ள "சுகாதார தகவல் தொடர்பான தேசியக் கொள்கையானது" சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அமைச்சரவை யினால் இந்த கொள்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.