• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச தேசிய முதியோர் சுகாதார கொள்கையும் திறமுறையும்
- எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் அதிகரித்துள்ளமை, பிறப்பு குறைவடைந்துள்ளமை போன்ற முக்கிய காரணங்களினால் முதியோரின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருகின்றமை இலங்கை முகம் கொடுக்கும் தற்போதைய பிரச்சினையொன்றாகும். தற்போது சுமார் 12 சதவீதமான 60 வயதிற்கு மேற்பட்ட சனத்தொகையானது 2020 இல் 16 சதவீதம் வரையும் 2050 இல் 29 சதவீதம் வரையும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலைமைக்கு முகம்கொடுப்பதற்காக முதியோர் சுகாதார உதவிச் சேவையை உரிய வகையில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக, இலங்கையில் வசிக்கும் சகல சிரேட்ட பிரசைகளுக்கும் விரிவான சுகாதார சேவையினை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளதும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுமான "உத்தேச தேசிய முதியோர் சுகாதார கொள்கை" அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.