2016-12-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு இருப்புத் தொகையொன்றைப் பேணும் பொருட்டு அரிசியினை இறக்குமதி செய்தல் - நாடு முகங்கொடுத்துள்ள பிரதிகூலமான காலநிலை காரணமாக போதுமான மழை கிடைக்காமையினால் இந்த ஆண்டில் பெரும்போக நெல் செய்கைப்பண்ணப்பட்டுள்ள காணியின் அளவு துரிதமாக குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக அரிசி பற்றாக்குறை மற்றும் சந்தையில் அரிசி விலை அதிகரிப்பு என்பவற்றை தடுப்பதற்காக பாதுகாப்பான இருப்புத் தொகையொன்றாக பேணும் பொட்டு தனியார் துறையூடாக அரிசி இறக்குமதி செய்வதற்கும் அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசி பாதுகாப்புத் தொகையொன்றாக குதங்களில் களஞ்சியப்படுத்துவதற்கும் சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் அந்த அரிசியை முறையாக சந்தைக்கு விடுவிப்பதற்குமாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |