• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு அதிவேகப்பாதை நீடிப்புக் கருத்திட்டத்தின் சிவில் வேலைகளுக்கான நிருமாணிப்பு மேற்பார்வை மற்றும் வடிவமைப்பு ஆய்வு தொடர்பிலான மதியுரைச் சேவைக்கு நிதியிடல்
- தெற்கு அதிவேகப்பாதையை மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வரை நீடிப்பதற்கான கருத்திட்டத்தின் நான்கு கட்டங்களினதும் நிருமாணிப்பு வேலைகள் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதோடு, இதன் நிருமாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கருத்திட்டத்தின் சிவில் வேலை நிருமாணிப்பு மேற்பார்வை மற்றும் வடிவமைப்பு, ஆய்வு என்பவற்றின்மதியுரைச் சேவைக்கு நிதியிடும் பொருட்டு 577 மில்லியன் ரென்மின்பி யுவான் கொண்ட கடன்தொகையொன்றை பெற்றுக் கொள்வதற்காக சீன அரசாங்கத்துடன் பணிக்கட்டமைப்பு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கும் சீன அரசாங்கத்தின் சலுகை கடன் வசதிகளின் கீழ் இந்த கடன்தொகையைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சீன ஏற்றுமதி, இறக்குமதி வங்கியுடன் கடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்குமாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.