2016-12-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அநுராதபுரம், பொலன்நறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நிலக்கீழ்நீர் கண்காணிப்பு வலையமைப்பொன்றை தாபிக்கும் முன்னோடிக் கருத்திட்டம் - இலங்கையில் நிலக்கீழ் நீர் பாவனையை உரிய முகாமைத்துவதற்குள் கொண்டுவருவது மிக முக்கியமானதோடு, இதற்காக நிலக்கீழ் நீரின் அளவு மற்றும் தரம் தொடர்பிலான நடைமுறைத் தரவுகளைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக அநுராதபுரம் மாவட்டத்தின் மல்வத்துஓயா, பொலன்நறுவை மாவட்டத்தின் மாதுருஓயா, மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன்ஓயா ஆகிய ஆற்றுப்படுக்கைகளைத் தழுவி நிலக்கீழ் நீர் கண்காணிப்பு தரவு முறைமையொன்றைத் தாபிப்பதற்கான முன்னோடி கருத்திட்டத்திற்குரிய ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |