2016-12-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உடம்பினுள் செலுத்தும் கரைசல் (IV) உற்பத்திக் கூடமொன்றை இலங்கையில் தாபித்தல் - மருந்து மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வருடாந்தம் பாரிய தொகையொன்றை செலவு செய்கின்றது. இந்த அந்நிய செலாவணியை ஓரளவாவது சேமித்துக் கொள்வதற்கும் சகல அரசாங்க வைத்தியசாலைகளுக்குத் தேவையான உடம்பினுள் செலுத்தும் கரைசல்களின் உற்பத்தியை புதியதாகவும் உயர் தரத்திலும் மிக குறுகிய காலத்திலும் தொடர்ச்சியாக வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் உடம்பினுள் செலுத்தும் கரைசல் (IV) உற்பத்திக் கூடமொன்றை இலங்கையில் தாபிக்கும் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்திக்கூடத்தை தாபிக்கும் கருத்திட்டத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|