2016-12-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக ஹபரன வரை புதிய புகையிரத பாதையை நிருமாணித்தல் - குருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக ஹபரன வரை புதிய புகையிரத பாதையை நிருமாணிப்பது சம்பந்தமான சுற்றாடல் பாதிப்பு பற்றிய ஆய்வானது ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. சீன நிருமாணிப்பு கம்பனியொன்றான இந்த கருத்திட்ட பிரேரிப்பாளரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தொழினுட்ப பிரேரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் போது அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவுக்கு ஒத்துழைப்பு நல்குவதற்காக மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் சேவையைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |