2016-12-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டம் காரணமாக இடம்பெயரும் குடும்பங்களை மெதிரிகிரிய பிரதேச செயலகப் பிரிவில் மீளக் குடியமர்த்துதல் - மொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டம் காரணமாக இடம்பெயரும் மக்களின் ஒரு பகுதியினர் களுகங்கை நீர்த்தேக்க பிரதேசத்தில் குடியமர்த்தப்படுவதோடு, மீதி குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக மகாவலி D வலயத்திற்குரிய மெதிரிகிரிய பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்படக்கூடிய சுமார் 9,000 ஹெக்டயார் காணி இனங்காணப்பட்டுள்ளது. இதன்கீழ் மெதிரிகிரிய பிரதேச செயலகப் பிரிவின் 04 கிாம உத்தியோகத்தர் பிரிவுகளில் அபிவிருத்தி பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, இந்த பிரதேச செயலகப் பிரிவுகளை முழுமையாக தழுவும் விதத்தில் குடியேற்ற அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைவாக தற்போது குறைவான அபிவிருத்தி நிலைமை நிலவும் மெதிரிகிரிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 09 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் நீர்ப்பாசன மற்றும் குடியேற்ற அபிவிருத்தி பணிகளை விரிவுபடுத்துவதற்கும் மீதி 32 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் குடியேற்ற அபிவிருத்தி பணிகளை விரிவுபடுத்துவதற்கும் உரிய சாத்திய தகவாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |