2016-12-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நக்கில்ஸ் தகவல் நிலையத்தின் நிருமாணிப்பு - வன பாதுகாப்புத் திணைக்களம் - மத்திய மலைநாடு உலக மரபுரிமைக்குரிய வனப்பிரதேசமான நக்கில்ஸ் வன ஒதுக்கத்தினுள் சகல அம்சங்களையும் கொண்ட தகவல் நிலையமொன்றை நிருமாணிக்கும் பணிகள் 2014 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்வதில் நிலவிய பிரச்சினை காரணமாக அதன் நிருமாணிப்பு பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது. “2016 - 2018 புனருதய" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிடைக்கவுள்ள 23 மில்லியன் ரூபா நிதி ஏற்பாட்டினைப் பயன்படுத்தி இந்த தகவல் நிலையத்தின் நிருமாணிப்பு வேலைகளை மீள ஆரம்பிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |