2016-12-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் 100 மெ.வொ. சக்தி கொள்திறனுடைய சூரியசக்தி பேட்டையொன்றை நிருமாணித்தல் - தற்போது சுற்றாடல் நட்புறவுமிக்க புதுப்பிக்கதக்க வலுசக்தி தோற்றுவாய்களின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதன்பால் விசேட கவனம் உலகம் பூராவும் செலுத்தப்பட்டுவருகின்றது. இதன் போது சூரிய சக்திக்கு கூடிய முன்னுரிமை கிடைத்துள்ளது. சுமார் 11.3 மெகாவொட் சூரிய சக்தி உற்பத்தி நிலையங்கள் இலங்கையில் தற்போது மத்திய மின்சார வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதோடு, தேறிய மானி வாசிப்பு முறையின் கீழ் அண்ணளவாக 30 மெகாவொட் மின்சாரம் பிறப்பிக்கப்படுகின்றது. இலங்கையில் சூரிய சக்தி மின்சார உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில் தற்போது பல கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதோடு, 100 மெகாவொட் வீதம் கொண்ட மூன்று (03) சூரிய சக்தி பேட்டைகளை புதிதாக உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் முதலாம் கட்டமாக மொனராகலை, சியம்பலாண்டுவ பிரதேசத்தில் 100 மெகாவொட் கொள்திறனுடைய சூரிய சக்தி பேட்டையொன்றை நிருமாணிப்பதற்கான சாத்தியத் தகவாய்வொன்றை மேற்கொள்ளும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |