• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்துதல்
- ஒற்றுமையான, பலம் மிக்க அதேபோன்று சௌபாக்கியம்மிக்க இனமொன்றுக்கான அத்திவாரத்தையிட்டு, மக்களிடையே ஒற்றுமை, சமாதானம், கருணை மற்றும் சகோதரத்துவத்தை விருத்தி செய்யும் நோக்கில் 2017 ஆம் ஆணடிலிருந்து ஒவ்வொரு வருடமும் சனவரி மாதம் 08 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதிவரை தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்துவதற்கும் 2017 ஆம் ஆண்டிலிருந்து இதற்கு ஒருங்கிணைவாக நாட்டின் சகல பாடசாலைகள், ஊடகங்கள், அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களை மையப்படுத்தி தேசிய நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குமாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.