• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச புதிய களனி பாலத்தின் நிருமாணிப்பு பணிகளுக்காக இரண்டு மின்சார அனுப்பீட்டு வழிகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்தல்
- கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையுடன் இணைக்கும் பொருட்டு களனி கங்கைக்குக் குறுக்காக ஆறு பாதைகளைக் கொண்ட புதிய பாலமொன்றை நிருமாணிப்பதற்கான ஆரம்பப்பணிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த பால நிருமாணிப்பின் போது பிரதான மின்சார அனுப்பீட்டு வழிகளான கொலன்னாவ - களனிதிஸ்ஸ 132kV அனுப்பீட்டு வழி மற்றும் பியகம - களனிதிஸ்ஸ 220kV அனுப்பீட்டு வழி ஆகியவற்றை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதற்கமைவாக, இந்த இரண்டு அனுப்பீட்டு வழிகளையும் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.