• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 ஆம் 2017 ஆம் ஆண்டுகளுக்கான வரவுசெலவுத்திட்ட நிதியிடல்
- வரவுசெலவுத்திட்ட நிதியிடலுக்கு தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்ளும் போது அரசாங்கத்தின் பிணைகளை வழங்குவது போன்ற உள்நாட்டு மூலவளங்களைப் பயன்படுத்துவதற்கு மேலதிகமாக, அரசாங்க வங்கிகளில் வௌிநாட்டு நாணய வங்கிப் பிரிவுகளின் மூலம் நிதிகளைப் பிறப்பித்துக் கொள்ளல், அந்நிய செலாவணி, தவணை நிதியிடல் வசதிகளை ஏற்பாடு செய்து கொள்ளல் மற்றும் சர்வதேச பொன்முறிகளை வௌியிடுதல் போன்ற வௌிநாட்டுமூலவளங்களையும் பயன்படுத்தலாம். அவ்வாறு பல்வகையான கடன் எடுத்தல் மாற்று வழிகள் மூலம் குறைந்த செலவின் கீழ் நிதிகளை ஏற்பாடு செய்ய இயலுமாவதோடு, இதன் மூலம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இலங்கையின் கடன் சந்தையில் நுழைவதற்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அதேபோன்று இந்த முதலீட்டாளர்களுக்கு இடையில் கூடிய போட்டிகரமான நிலையும் உருவாகும். 2017 ஆம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட கடன் எடுத்தல் எல்லைக்குள் அந்நிய செலாவணி தவணை நிதியிடல் வசதிகளை ஏற்பாடு செய்து கொள்வது சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு பொது திறைசேரியினதும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினதும் இலங்கை மத்திய வங்கியினதும் உத்தியோகத்தர்களைக் கொண்ட வழிநடத்தல் குழுவொன்றையும் தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றையும் நியமிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.