2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முல்லைதீவு பொலிஸ் நிலைய நிருமாணிப்பு - வடமாகாணத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக செயற்படுத்தப்படும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பொலிஸ் நிலையங்களுக்கு கட்டடங்களை நிருமாணித்தல், பொலிஸ் நிலையங்களை விருத்தி செய்தல் என்பனவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. தற்போது முல்லைதீவு பொலிஸ் நிலையம் நடாத்திச் செல்லப்படும் வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ள கட்டடத்திற்குப் பதிலாக புதிய கட்டடமொன்றை நிருமாணிப்பதற்காக 2014 ஆம் ஆண்டில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதமாகியுள்ளது. ஆதலால், முல்லைதீவு பொலிஸ் நிலையத்தை நிருமாணிக்கும் பணிகளைத் துரிதமாக ஆரம்பிக்கும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |