• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி கங்கை வௌ்ளப்பெருக்கு பாதுகாப்பு மதில்களை விருத்தி செய்தல்
- களனி கங்கை இலங்கையிலுள்ள பிரதான கங்கைகளில் ஒன்றாவதோடு, இதன் ஆற்றுப்படுகையின் 2/3 பிரதேசமானது எந்நேரமும் வௌ்ளப்பெருக்குக்கு உட்படும் கொழும்பு நகரம் உட்பட அதற்கண்மித்த பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்ட சதுப்பு நிலங்களைக் கொண்டுள்ளது. கொழும்பு நகரத்தையும் களனி நகரத்தையும் வௌ்ளப்பெருக்கு ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்காக களனி கங்கை வௌ்ளப்பெருக்கு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்டுள்ள அணைசுவர்களில் பாதுகாப்பற்ற இடங்கள் உள்ளதென 2016 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு நிலையின் போது அவதானிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாவது அத்துமீறிய குடியிருப்பாளர்களின் செயற்பாடுகளெனவும் இனங்காணப்பட்டுள்ளது. தற்போதுள்ள பிரதான அணைசுவர்களை மறுசீரமைக்கும் நோக்கில் களனி கங்கை வௌ்ளப்பெருக்கு பாதுகாப்பு மதில்களை விருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை 1,000 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.