2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவுக்காகக் கட்டடமொன்றை நிருமாணித்தல் - கொழும்புப் பிரதேசத்தில் 32 ஏக்கர் நிலப்பிரதேசத்தில் அமைந்துள்ள 3,300 படுக்கை வசதிகளைக் கொண்ட இலங்கை தேசிய வைத்தியசாலையானது தென்கிழக்கு ஆசியாவின் பெரிய வைத்தியசாலையாகும். இந்த வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவானது 1948 ஆம் ஆண்டில் இந்த வைத்தியசாலை தாபிக்கப்பட்ட கட்டடத்திலேயே இதுவரை நடாத்திச் செல்லப்படுவதோடு, இந்த பிரிவுக்கு நாளாந்தம் வரும் 5,000 க்கு மேற்பட்டோருக்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு இங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகள் எவ்வகையிலும் போதுமானதாகாது. இதற்கமைவாக மக்கள் சீனக் குடியரசின் நன்கொடையொன்றாக புதிய வௌிநோயாளர் பிரிவுக்கான கட்டடத்தொகுதியொன்றை இலங்கை தேசிய வைத்தியசாலையில் நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மக்கள் சீனக் குடியரசுடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |