• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அவசர அனர்த்த நிலைமையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமாக தங்கியிருக்கக்கூடிய பாதுகாப்பான நிலையமொன்றை நிருமாணித்தல்
- கடும்மழை காரணமாக எந்நேரமும் மண்சரிவு அனர்த்தத்திற்கு உள்ளாகும் மாவட்டமொன்றாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பினால் பதுளை மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் திடீர் அனர்த்தங்களுக்கு உட்படக்கூடிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக பாதுகாப்பு நிலையமொன்றை நிருமாணிக்கும் தேவை எழுந்துள்ளது. இதற்கமைவாக அவசர அனர்த்த நிலைமைகளின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமாக தங்கக்கூடிய பாதுகாப்பு நிலையமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு பதுளை மாவட்டத்திலுள்ள பலாங்கொடை பெருந்தோட்ட கம்பனிக்குச் சொந்தமான அரை ஏக்கர் காணியை அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்காக உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.