• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையிலிருந்து சிறுவர் ஊழியத்தை ஒழிப்பது தொடர்பான தேசிய கொள்கை
- சிறுவர் ஊழியத்தை முற்றுமுழுதாக இல்லாதொழிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் 2010 ஆம் ஆண்டில் நெதர்லாந்தின், ஹேக் நகரத்தில் நடாத்தப்பட்ட உலகளாவிய சிறுவர் ஊழியர் தொடர்பிலான மாநாட்டில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. 2008 / 2009 ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015 / 2016 ஆம் ஆண்டளவில் இலங்கையில் தொழில் செய்யும் சிறுவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக சிறுவர் செயற்பாடுகள் பற்றிய ஆய்வு அறிக்கையினூடாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைவாக சிறுவர் ஊழியத்தை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் சாத்தியம் இலங்கையில் காணக்கிடைக்கின்றது. அத்துடன் ஐரோப்பிய யூனியனின் GSP+ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டுத் திட்டத்தின் கீழும் சிறுவர் ஊழியத்தை இல்லாதொழித்தல் தொடர்பில் தேசிய கொள்கையொன்றை உருவாக்குவது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக தயாரிக்கப்பட்டுள்ள சிறுவர் ஊழியத்தை முற்றுமுழுதாக இல்லாதொழிப்பதற்கான தேசிய கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்குமாக தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.