• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை இராணுவத்தின் ஏனைய தரங்களைச் சேர்ந்த படைவீரர்களின் தங்குமிட வசதிகள்
- இராணுவத் தலைமையகம் மற்றும் அதனோடிணைந்த நிறுவனங்கள், இராணுவ வைத்தியசாலை பதவியணி என கொழும்புப் பிரதேசத்தில் தாபிக்கப்பட்டுள்ள ஏனைய தரங்களைச் சேர்ந்த படைவீரர்களுக்குப் போதுமானவளவு நிரந்தர தங்குமிட வசதிகள் இல்லாமை பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலைமையைத் தவிர்க்கும் நோக்கில் ஏனைய தரங்களைச் சேர்ந்த படைவீரர்களுக்கு நிரந்தர தங்குமிட வசதிகளுடன் கூடிய புதிய கட்டடமொன்றை 239.12 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நாரஹேன்பிட்ட. மெனிங் ரவுனிலுள்ள இலங்கை தரைப்படைக்குச் சொந்தமான காணியில் நிருமாணிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.