• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் 2030 தேசிய நிலைபேறுடைய அபிவிருத்தி தொலைநோக்கை வெற்றி கொள்ளல்
- நிலைபேறுடைய அபிவிருத்தியை வெற்றி கொள்வதானது அது எப்பொழுதும் பல்துறை இலக்குகளை வெற்றி கொள்வதன் மீது தங்கியுள்ளமையினால், இந்த இலக்குகளை வெற்றி கொள்ளும் போது பின்னூட்டல் மற்றும் மதிப்பிடல் என்னும் பணிகள் மிக முக்கியமானதாகும். ஐக்கிய நாடுகளின் 17 நிலைபேறான அபிவிருத்தி இலக்குத் துறைகளுக்கு அமைவாக 2030 தேசிய நிலைபேறுடைய அபிவிருத்தி தொலைநோக்கை வகுத்தல், 2030 ஆம் ஆண்டளவில் இலங்கை அடையவேண்டிய அபிவிருத்தி மட்டங்களை முன்னுரிமைகளுக்கு அமைவாக இனங்காணுதல் அத்துடன் அவ்வாறு இனங்காணப்பட்ட இலக்குகளை வெற்றி கொள்வதற்கு காலக்கட்டமைப்பொன்றை வகுத்தமைத்தல், 2030 ஆம் ஆண்டுக்கான தேசிய நிலைபேறான அபிவிருத்தி தொலைநோக்கை வெற்றி கொள்ளும் போது அரசாங்க, தனியார் மற்றும் சிவில் அமைப்புகள் என்பவற்றுக்குரிய வகிபாகத்தை இனங்காணுதல், இனங்காணப்பட்ட இலக்குகள் அடையப்படுவது தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வு, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் திறமுறைகள் மீளாய்வு செய்யப்பட்டு இற்றைப்படுத்தல் உட்பட இது தொடர்பிலலான ஏனைய பணிகளை நிறைவேற்றும் பொருட்டு 05 அமைச்சரவை அமைச்சர்களையும் மாகாண முதலமைச்சர் ஒருவரையும் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கும் இந்த உபகுழுவின் நோக்கங்களுக்கு ஒத்தாசை நல்கும் பொருட்டு நிபுணத்துவ குழுவொன்றை நியமிப்பதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.