• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிங் - நில்வலா திசை திருப்பல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ஆராயும் பொருட்டு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தல்
- 2014 ஆம் ஆண்டில் அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அங்கீகாரத்தின் பிரகாரம் கிங் - நில்வலா திசை திருப்பல் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக கிங் - நில்வலா திசை திருப்பல் கருத்திட்டம் 696 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு பொறியியல், கொள்வனவு, நிருமாணிப்பு ஒப்பந்தமானது சீனக் கம்பனியொன்றுக்கு வழங்கப்பட்டது. ஆயினும் சீன ஏற்றுமதி, இறக்குமதி வங்கியுடனான கடன் உடன்படிக்கையின் பணிகள் பூர்த்தி செய்யப்படாமையினால் இந்தக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கமைவாக இந்த கருத்திட்டத்திற்குரியதாக பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக ஆராயும் பொருட்டு அமைச்சரவை உபகுழுவொன்றையும் அதற்கு ஒத்தாசை நல்கும் பொருட்டு சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றையும் நியமிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* இந்த கருத்திட்டத்திற்குரியதாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த உடன்படிக்கை அரசாங்கத்திற்கு எவ்வித மேலதிக செலவையும் ஏற்காத விதத்தில் நடைமுறைப்படுத்தும் சாத்தியம் உள்ளதா என்பது பற்றியும்.

* ஒருதரப்புக்கு உடன்படிக்கையை ஒருதலை பட்சமாக முடிவுக்கு கொண்டுவர தேவைப்படுமாயின் அதன் பிரதிகூலமான தாக்கங்களையும் செலவுகளையும் மதிப்பிடுதல்.

* இந்த விடயம் சம்பந்தமாக உத்தியோகத்தர்களினால் நிதி நியதி, அரசாங்க நடவடிக்கை முறைகள் மற்றும் சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் எவையும் மீறப்பட்டுள்ளனவா என்பது பற்றியும்.

* எவ்வித பிரதிகூலமான பெறுபேறுகளின்றி முற்பண கொடுப்பனவினை மீளப் பெறுவது எவ்வாறு என்பது பற்றியும்.