2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அதிமேதகைய சனாதிபதி அவர்களின் மலேசியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுதல் - அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 2016 திசெம்பர் 15 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதிவரை மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது மலேசியா அரசாங்கத்துடன் பின்வரும் இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் பொருட்டு பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது: * உல்லாசப் பிரயாணம் தொடர்பிலான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்குதல் மீதான புரிந்துணர்வு உடன்படிக்கை; * பயிற்சியளித்தல், ஆராய்ச்சி, அரசாங்க நிருவாகம் மற்றும் முகாமைத்துவம் என்ற துறையிலான ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை; * இலங்கை கமத்தொழில் ஆராய்ச்சி கொள்கை சபைக்கும் மலேசியாவின் கமத்தொழில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை; * இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கும் மலேசியாவின் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் நுகர்வுப் பொருட்கள் அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை; * கலாச்சாரம், கலைகள் மற்றும் மரபுரிமை ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை; அத்துடன் * இளையோர் அபிவிருத்தி துறையில் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை. |