2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தெதுருஓயா நீர்வழங்கல் கருத்திட்டம் - பொறித்தொகுதி மற்றும் வடிவமைப்பு நிருமாண ஒப்பந்தத்தை வழங்குதல் - குருநாகல் மாவட்டத்தின் மாகோ மற்றும் பொல்பித்திகம பிரதேச செயலகப் பிரிவுகளில் 97 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பானதும் சுத்தமானதுமான குடிநீர் போதுமான அளவு வழங்கும் நோக்கில் தெதுருஓயா நீர்வழங்கல் கருத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் 18,150 வீடுகளுக்கு குழாய்நீர் இணைப்புகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு இதன் மூலம் சுமார் 90,800 பேர்களுக்கு நலன் கிடைக்கப்பெறும் இந்தக் கருத்திட்டத்தின் சிவில், இயந்திர மற்றும் மின்சார வேலைகளுக்காக பொறித்தொகுதி மற்றும் வடிவமைப்பு நிருமாண ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |