• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலிஸ் தகவல் மற்றும் தொடர்பாடல் முறைமையை விருத்தி செய்தல்
- “பொலிஸ் தகவல் மற்றும் தொடர்பாடல் முறைமையை" நடைமுறைப் படுத்துவதற்கு அமைச்சரவையினால் 2013 ஆம் ஆண்டில் அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. ஆயினும் இந்த துறையின் புதிய ஆக்கங்களினால் நிகழ்ந்துள்ள தொழினுட்ப விருத்தி காரணமாக இந்த கருத்திட்டத்தின் முழுமொத்த விடயநோக்கெல்லையையும் திருத்த வேண்டியுள்ளமை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கமைவாக இந்த கருத்திட்டத்தின் முழுமொத்த விடயநோக் கெல்லையை மேலும் திருத்துவதற்கு நிதி அமைச்சின் உடன்பாட்டுடன் தொழினுட்ப குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்த கருத்திட்டத்தை தாபிக்கும் போது இலங்கை பொலிசினால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் "அனலொக்" தொடர்பாடல் உபகரணங்களுக்குப் பதிலாக "டிஜிட்டல்" தொடர்பாடல் உபகரணங்களை பயன்படுத்துவதற்கு கட்டாயமாக தேவைப்படும் அலைவரிசையை தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் இலங்கை பொலிசுக்கு நிரந்தரமாக குறித்தொதுக்குவதற்குமாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.