2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சேவை நிலையங்களில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளை இல்லா தொழித்தலும் பெண்களைப் பலப்படுத்துதலும் - இலங்கை செய்துகொண்டுள்ள சருவதேச பொறுப்புகளுக்கு அமைவாக சேவை நிலையங்களில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கான சட்டம் அதேபோன்று வேறு நடவடிக்கைகளும் எடுக்கவேண்டியுள்ளது. இதற்கமைவாக அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அவற்றின் கீழ் மாவட்ட மற்றும் பிராந்திய மட்டங்களில் இயங்கும் நிறுவனங்களில் கடமையாற்றும் பெண்களுக்கு பெண்கள் என்ற காரணத்தினால் ஏற்படக்கூடிய வன்முறைகளை இல்லாதொழிக்கும் அத்துடன் அவர்களை பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் குழுக்கள் சிரேட்ட உத்தியோ கத்தர்களின் தலைவமையில் சலக அமைச்சுக்களிலும் தாபிக்கும் பொருட்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |