2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையையும் பொருத்தமான வீடுகளையும் வழங்குதல் - பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்களில் தற்போது 256,533 குடும்பங்கள் வசிக்கின்றதோடு, அரசாங்கத்திற்குச் சொந்தமான பெருந்தோட்டங்களில் 9,025 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் குடும்பங்களுக்காக தற்போது நிருமாணிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 33,000 ஆகுமென்பதோடு மீதி குடும்பங்கள் லயன் அறைகளிலும் தற்காலிக சிறிய வீடுகளிலும் வசித்து வருகின்றனர். காணி உரிமையை மக்களுக்கு வழங்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக பெருந்தோட்டங்களில் வசிக்கும் சட்டபூர்வமான குடியிருப்பாளர்களுக்கு 7 பேர்ச்சர்ஸ் காணித் துண்டொன்று சார்பில் உடைமை மாற்றக்கூடிய, வங்கியில் பிணையாக வைக்கக்கூடிய தனி உரிமை உறுதிகளை வழங்குவதற்கும் அதற்காக தேவைப்படும் மண்சரிவு அபாயமற்றதென இனங்காணப்பட்ட காணிகளை பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளினாலும் ஏனைய அரசாங்க நிறுவனங்களினாலும் விடுவிப்பதற்குமாக காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினாலும் மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினாலும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |