• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மடுல்ல, பிங்கொட, கொலல்லாவத்த நீர்த்தேக்கத்தை மீளப் புதுப்பித்தல்
- ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் மடுல்ல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மடுல்ல, பிங்கொட, கொலல்லாவத்த நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு வேடுவ சமுதாயம் அதன் கமத்தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதோடு, இந்த நீர்த்தேக்கத்தை முறையாக நிருமாணித்து தருமாறு அவர்கள் நீண்டகாலமாக கோரிக்கையினை முன்வைத்துமுள்ளார்கள். இதற்கமைவாக இந்த நீர்த்தேக்கத்தை புனரமைத்து நிலையான நீர்ப்பாசன முகாமைத்துவ வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தப் பிரதேசத்தில் நில மற்றும் வயல் செய்கைகளை விருத்தி செய்து மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சுற்றாடல் பாதிப்பு மதிப்பீடொன்றை செய்ததன் பின்னர் 320 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் உன்னச்சி ஆற்றின் கிளையொன்றான கொலல்லாவத்த ஆற்றுக்கு குறுக்காக நிருமாணிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.