2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புறக்கோட்டை மனிங் சந்தையை பேலியகொட பிரதேசத்தில் மீளமைத்தல் - கொழும்பு நகரத்தின் மீள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புறக்கோட்டை மனிங் சந்தையை பேலியகொட பிரதேசத்தில் மீளமைத்து தற்போது மனிங் சந்தை அமைந்துள்ள காணியில் மேல் மாகாண மாநகரத் திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்டுள்ள பல்வகை போக்குவரத்து நிலையத்தின் பிரதான கட்டடத்தை நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மனிங் சந்தையில் தற்போதுள்ள சுமார் 1,200 வர்த்தகர்களை அதிலிருந்து வெ ளியேற்றி பேலியகொட பிரதேசத்திலுள்ள அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணியில் மீளமைப்பதற்குத் தேவையான நிருமாணிப்புப் பணிகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றதோடு, இந்த பணிகள் பூர்த்தியாகும் வரை தாமதிக்காது உத்தேச பல்வகை போக்குவரத்து நிலையத்தின் நிருமாணிப்பு வேலைகளை ஆரம்பிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளமையினால் மனிங் சந்தையிலுள்ள வர்த்தகர்களை வேறு பிரதேசமொன்றுக்கு துரிதமாக நகர்த்தும் தேவை எழுந்துள்ளது. இதற்காக பேலியகொடை பிரதேசத்திலுள்ள அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சுமார் 6 ஏக்கருக்கு அண்மையிலுள்ள காணித் துண்டொன்றை மூன்று (03) வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினாலும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|