• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பத்தரமுல்லை பல்மாதிரி போக்குவரத்து கேந்திர நிலையமொன்றைத் தாபித்தல்
- மேல் மாகாண மாநகர பிரதான திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் நிருவாக நிறுவனங்கள் அனைத்தையும் பத்தரமுல்லை மற்றும் ஶ்ரீ ஜயவரத்தனபுர கோட்டை பிரதேசங்களில் தாபிப்பதற்கு ஒருங்கிணைவாக இந்தப் பிரதேசத்தில் ஏற்படும் வாகன நெரிசல்களை குறைப்பது அத்தியாவசியமானதாகும். எதிர்கால அபிவிருத்தி பணிகள் காரணமாக பத்தரமுல்லை பிரதேசத்தில் உருவாகும் போக்குவரத்து தேவையை ஈடுசெய்வதற்காக பேருந்துகள், இலகு புகையிரத போக்குவரத்து, தற்போதுள்ள வீதிக்கு மேலாக செல்லும் அதிவேக பாதைகள் மற்றும் உள்ளக நீர் போக்குவரத்து போன்ற பல்மாதிரி போக்குவரத்து வசதிகளை உருவாக்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பல்மாதிரி போக்குவரத்து கேந்திர நிலையமொன்று, 113,000 சதுர அடி கொண்ட அலுவலக இடவசதி, 33,000 சதுர அடிகொண்ட தொடர்மாடி வீடுகள், 60,000 சதுர அடிகொண்ட வர்த்தக தேவைகளுக்கான இடவசதிகள் ஆகியவற்றைக் கொண்ட கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை பத்தரமுல்லை "சுகுருபாய" கட்டடத்திற்கு அருகாமையில் அரசாங்க - தனியார் கூட்டுத் தொழில்முயற்சி அடிப்படையின் கீழ் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.