• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆபத்தான ஆக்கிரமிப்பு தாவர இனங்களும் விலங்கினங்களும் இந்த நாட்டுக்கு வருவதை தடுத்தலும் அத்தகைய தாவரங்களையும் விலங்குகளையும் அழிப்பதற்கான புதிய சட்டமூலத்தை வரைதலும்
- இலங்கை பல் உயிரின பல்வகைமை வாழும் நாடுகளில் முதன்மை வாய்ந்ததாகும். ஆதலால், எமது நாட்டின் இயற்கை சூழல் முறைமையையும் நாட்டிற்கே உரியதான தாவர மற்றும் விலங்கினங்களைப் பாதுகாப்பது அத்தியாவசிய பணியொன்றாகும். சூழல் முறைமைக்கு புதிய அத்துடன் ஆக்கிரமிப்பு உயிரின விசேடங்களினால் இலங்கையின் உயிரினப் பல்வகைமைக்கு எதிராகவுள்ள அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கும் தற்போது பரவியுள்ள ஆக்கிரமிப்பு தாவரங்களினதும் விலங்கினங்களினதும் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லையெனவும் அதுபற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கமைவாக ஆபத்தான ஆக்கிரமிப்பு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இந்நாட்டிற்குள் ஊடுருவுவதை தடுப்பதற்கும் இந்த தாவரங்களையும் விலங்கினங்களையும் அழிப்பதற்கும் ஏற்பாடுகளை செய்யும் புதிய சட்டமூலமொன்றை வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.