• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கட்டடமொன்றை நிருமாணித்தல்
- சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது பேணப்பட்டு வரும் கட்டடத்தில் நிலவும் இடவசதி அதன் பணிகளை இடையூறு இன்றி நடாத்திச் செல்வதற்கு போதுமானதாக இல்லாததன் காரணத்தினால் இந்த திணைக்களத்திற்கு புதிய கட்டடமொன்றை மீயுயர் நீதிமன்ற கட்டடத் தொகுதி அமைந்துள்ள பிரதேசத்தில் நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக புதிய கட்டட நிருமாணிப்பின் ஆரம்ப பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. உத்தேச புதிய கட்டடத்தின் மீதி நிருமாணிப்பு வேலைகளுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.