• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாரவில கரையோர மணல் ஊட்ட கருத்திட்டம் (இரண்டாம் கட்டம்)
- மாரவில கரையோர கடல் அரிப்பினை குறைப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட மணல் ஊட்ட கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மாரவில கரையோரத்திற்கு மணல் இறைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாரவில கரையோரத்தில் நீண்டகால நிலையான தன்மை சார்பில் இந்த கருத்திட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டில் சேமிப்பாகவுள்ள நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி மேலதிகமாக 400,000 கனமீற்றர் மணலை இறைப்பதன் மூலம் மாரவில, தல்வில கரையோரப் பகுதியில் மேலதிக பிரதேசமொன்றில் மணல் ஊட்டம் செய்யும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.