2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வத்தளை நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிருமாணித்தல் - வத்தளை நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிருமாணிக்கும் கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்திற்கான பணிகளை 156.18 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக செய்து கொள்ளும் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வத்தளை நீதிமன்ற பணிகள் தற்போது மஹர நீதிமன்ற கட்டடத் தொகுதியின் ஒரு பகுதியில் செய்யப்பட்டு வருகின்றதோடு, வத்தளை நீதிமன்றத்தின் ஊடாக சேவைகளை எதிர்பார்க்கும் தரப்பினர்களுக்கு மிகச் சிறந்த சேவையொன்றை வழங்கும் பொருட்டு இந்த கருத்திட்டம் துரிதமாக பூர்த்தி செய்யப்படவேண்டியுள்ளது. இதற்கமைவாக முதலாம் கட்டத்தின் நிருமாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேளையில் அத்தியாவசியமாக செய்யப்படவேண்டுமென இனங்காணப்பட்டுள்ள தேவைகளை உள்ளடக்கிய நிருமாணிப்பு கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டமானது 148.29 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ள செலவில் வடிவமைத்து நிருமாணிக்கும் அடிப்படையில் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |