• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுன்னாகம் பிரதேசத்தில் இரண்டு காற்று சக்தி மின் உற்பத்தி நிலையங்களைத் தாபித்தல்
- மின்சார தேவையின் பெருமளவு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தோற்றுவாய்களிலிருந்து பெற்றுக் கொள்வதன் பால் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு, அதற்காக சூரிய மற்றும் காற்று மின் உற்பத்தி நிலையங்களை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சுன்னாகம் பிரதேசத்தில் 10 MW வீதம் அமைந்த இரண்டு காற்று சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிருமாணிப்பதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.