2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பதுளை - செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டம் - பதுளையிலிருந்து பஸ்சறை மற்றும் பஸ்சறையிலிருந்து லுணுகலை வரையிலான வீதிப் பகுதிகள் - சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தினால் நிதியளிக்கப்படும் பதுளை - செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் கீழ் பதுளையிலிருந்து பஸ்சறை வரை செல்லும் 20 கிலோமீற்றர் நீளமானதும் பஸ்சறையிலிருந்து லுணுகலை வரை 21 கிலோமீற்றர் நீளமானதுமான வீதிப் பகுதிகளை மேம்படுத்தும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |