• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி வெக்குனகொட “நிலசெவன” கருத்திட்டத்திலிருந்து 100 வீட்டு அலகுகளை இலங்கை பொலிசுக்கு குறித்தொதுக்குதல்
- இலங்கை முதலீட்டுச் சபையினாலும் பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினாலும் தனியார் முதலீட்டாளர் ஒருவருடன் இணைந்து முற்தரப்பு உடன்படிக்கையொன்றின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் காலி வெக்குனகொட “நிலசெவன” கருத்திட்டத்திலிருந்து 100 வீட்டு அலகுகளை காலி பிரதேசத்தில் சேவை புரிந்துகொண்டிருக்கும் வீட்டுத் தேவையுடைய பொலிஸ் கொன்ஸ்ரபல், பொலிஸ் சார்ஜன், பொலிஸ் பரிசோதகர் தரங்களைச் சேர்ந்த பதவிகளை வகிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்காக 333 மில்லியன் ரூபா கொண்ட திறைசேரி நிதி ஏற்பாட்டினை இலங்கை பொலிசுக்காக குறித்தொதுக்கிக் கொள்ளும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.