• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை மாவட்டத்தின் பல் இன மற்றும் மும்மொழி கல்வியுடன் கூடிய புதிய தேசிய பாடசாலையொன்றை நிருமாணித்தல்
- பொலன்நறுவை மாவட்டத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையும் சகல மாணவர்களுக்கும் பொலன்நறுவை றோயல் கல்லூரியில் 6 ஆம் தரத்தில் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்பினை வழங்குவதற்கான இடவசதி போதுமானதாக இல்லாமையினால் சகல வசதிகளுடனும் கூடிய 6 ஆம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் புதிய பாடசாலையொன்றை கதுருவெல நகரத்தில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய நல்லிணக்கத்தை உறுதி செய்யும் விதத்தில் பல் இன மற்றும் மும்மொழி கல்வியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தப் புதிய மாதிரி தேசிய பாடசாலையை நிருமாணிப்பதற்கு சுமார் 1,200 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 900 மில்லியன் ரூபா இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கப்படுவதோடு, மீதி 300 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இந்த நிதி உதவியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இந்திய குடியரசுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கும் கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த பாடசாலையின் நிருமாணிப்பு வேலைகளை நடைமுறைப்படுத்துவதற்குமாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.