• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையர்களை மலேசியாவில் தொழிலுக்கு அமர்த்துவது சம்பந்தமான உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை
- புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதத்தில் இலங்கை வீட்டு பணியாளர்கள் உட்பட ஏனைய ஊழியர்கள் மலேசியாவில் தொழில் நிமித்தம் ஆட்சேர்ப்புச் செய்தல் மற்றும் தொழிலுக்கு அமர்த்தல் சம்பந்தமாக வசதிகளை செய்வதற்கான வழிமுயையொன்றை வகுத்தமைக்கும் பொருட்டு இலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு 2015 ஆம் ஆண்டில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர், சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை மலேசியா அரசாங்கத்தின் மனிதவள அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.