2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சொபாசிறிபுர வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடுகளை மண்சரிவு அபாயத்திலிருந்து பாதுகாத்தல் - தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் "அனைவருக்கும் வீடு" மாதிரி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவில் நிருமாணிக்கப்பட்டுள்ள சொபாசிறிபுர வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடுகளில் கணிசமானவை மண்சரிவு அபாயத்திற்கு ஆட்பட்டுள்ளதென தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்பினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைவாக சொபாசிறிபுர வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடுகளை மண்சரிவு அபாயத்திலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை பொதுத் திறைசேரியிலிருந்து ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |