• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தடல்ல மாவட்ட விளையாட்டு தொகுதியை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றை பெற்றுக் கொள்ளல்
- காலி நகரத்திலுள்ள பொது மைதானமானது சருவதேச கிரிக்கட் மைதானமாக மாற்றப்பட்டதன் காரணமாக, பொது விளையாட்டு மைதானமொன்றாக அபிவிருத்தி செய்வதற்காக தடல்ல பிரதேசத்திலுள்ள 17 ஏக்கர் காணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த காணியில் ஏற்கனவே காணி மீட்பு மற்றும் ஆரம்ப நிருமாணிப்பு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, 400 மீற்றர் ஓட்டப்பாதை மற்றும் நீச்சல் தடாகம் என்பவற்றை நிருமாணிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கருத்திட்டத்தை துரிதமாக பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் குறித்த காணியின் சுவீகரிப்பு பணிகளை பூர்த்தி செய்வதற்காக 400 மில்லியன் ரூபாவை பொதுத் திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினாலும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.