• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அமரபுர நிக்காயபிவுருதி அறச்சபையின் தலைமையகத்தை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றை வழங்குதல்
- இலங்கை அமரபுர நிக்காயாவின் கீழ் சுமார் 3,700 விஹாரைகள் நாடு பூராவும் உள்ளதோடு, இந்த விஹரைகளில் அண்ணளவாக 12,000 பிக்குமார்கள் உள்ளார்கள். இலங்கையிலும் அதேபோன்று சருவதேச ரீதியிலும் மத ரீதியிலான பணிகளை பரப்புவதற்காக இலங்கை அமரபுர நிக்காயபிவுருதி அறச்சபையின் தலைமையகத்தை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றை வழங்குமாறு இந்த அறச்சபையினால் செய்யப்பட்டுள்ள கோரிக்கையானது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தலபத்பிட்டிய, ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான றூட் 02 பேர்ச்சர்ஸ் 4.2 கொண்ட காணித் துண்டொன்றை இலங்கை அமரபுர நிக்காயபிவுருதி அறச்சபைக்கு இறையிலி கொடையொன்றாக வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.