2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய லொத்தர் சபைக்கு புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல் - தேசிய லொத்தர் சபையினால் அரசாங்கத்தின் ஒன்றிணைந்த நிதியத்திற்கு பெருமளவில் பங்களிப்புச் செய்யப்படுவதோடு, அதன் பிரதான அலுவலகம் சுமார் 17.5 மில்லியன் செலவில் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட கட்டட மொன்றில் நடாத்திச் செல்லப்படுகின்றது. அதேபோன்று இந்தக் கட்டடத்திலுள்ள இடவசதிகளும் நிறுவனத்தின் தொழிற்பாட்டுப் பணிகளுக்குப் போதுமானதாகவில்லை. இதற்கமைவாக தேசிய லொத்தர் சபைக்கு புதிய கட்டடமொன்றை இந்த சபைக்குச் சொந்தமான கொழும்பு - 02, வொக்க்ஷோல் வீதியிலுள்ள காணியில் நிருமாணிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |