• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தாவர தொற்று தடைகாப்பு மற்றும் நோய் தடுப்பு கட்டளைச்சட்டதை திருத்துதல்
- சர்வதேச போக்குவரத்து, வர்த்தகம், சுற்றுலாத்தொழில், மற்றும் ஆள்வலு நாட்டிற்குள் கொண்டுவருதல் மற்றும் வௌிநாடுகளுக்கு கொண்டுசெல்தல் என்பன ஊடாக உலகளாவிய தொடர்புகள் உருவாகும் பின்னணியில் தொற்றுநோய்கள் நாட்டுக்குநாடு பரவுவதைத் தடுப்பதற்கான சுகாதார திறமுறைகளை நடைமுறைப் படுத்துவதற்கு இலகுவாகும் விதத்தில் இலங்கையில் சட்டக் கட்டமைப்பைத் தாபிக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். இலங்கையினால் கைச்சாத்திடப்பட்டுள்ள சர்வதேச சுகாதார ஒழுங்குவிதி (IHR-2005) மூலம் சர்வதேச போக்குவரத்திற்கும் வர்த்தகத்திற்கும் இடையூறு ஏற்படாதவாறு சர்வதேச ரீதியில் பரவும் நோய்களை தடுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும் அத்தகைய நோய்களிலிருந்து பாதுகாத்தல் போன்ற பொது மக்களின் சுகாதாரத்திற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகளை இலங்கையில் நடைமுறைப்படுத்து வதற்காக நோய் பரவுதல், தடுத்தல் மற்றும் தொற்றுநோய் தடைகாப்பு சம்பந்தமாக இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டமாகிய தாவர தொற்று தடைகாப்பு மற்றும் நோய் தடுப்பு கட்டளைச்சட்டத்திற்குத் தேவையான திருத்தங்களை செய்வதற்காக சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.