• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தொழில்பயிற்சி வழங்கப்படும் ஹந்தல "ரணவிரு வள நிலையத்தை" விருத்தி செய்தல்
- யுத்தத்தின்போது அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு சிவில் சமூகத்தில் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு தேவையான பின்னணியை உருவாக்குவதற்காக அவர்களுக்கு தொழில்பயிற்சிகளை வழங்கும் நிறுவனமொன்றாக ஹெந்தலவிலுள்ள "ரணவிரு வள நிலையமானது" 2010 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றது. இதன் முதலாம் கட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி தற்போது 09 க்கும் மேற்பட்ட தொழில்பயிற்சி பாடநெறிகள் இந்த நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் இரண்டாவது கட்டத்தின் கீழ் 05 புதிய கட்டடங்கள் நிருமாணிக்கப்பட்டு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்வதன் மூலம் இந்த பாடநெறிகளின் எண்ணிக்கையை 15 வரை அதிகரித்து , முறையான தொழில்பயிற்சி நிலையமொன்றாக "ரணவிரு வள நிலையத்தை" விருத்தி செய்யும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.