• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியை நிறுவுதல்
- இலங்கை திறமுறை ரீதியில் உலகத்துடன் தொடர்புபடுத்தும், பாதுகாப்புத்துறை சம்பந்தமான உள்நாட்டு வௌிநாட்டு வல்லுநர்களை ஒரு மையநிலையத்தினுள் சந்திக்க வைக்கும், பாதுகாப்பு திறமுறைகள் மற்றும் வழிமுறைகள் சம்பந்தமாக இராணுவ மற்றும் சிவில் உத்தியோகத்தர்கள் பெரும்பாலானோருக்கு முறையான பயிற்சியொன்றை வழங்கும் நோக்கில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியொன்றை இலங்கையில் தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த கல்லூரியை கொழும்புக்கு அண்மைய பிரதேசமொன்றில் தாபிக்கும் முக்கியத்துவம் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தற்போது பயன்படுத்தாமலுள்ள இதற்கு முன்பு சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக உபயோகப்படுத்தப்பட்ட "மும்தாஜ் மஹால்" மனையிடத்தை பொருத்தமானவாறு புனரமைத்து, இதற்காக பயன்படுத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.